பறவைகள் வானில் பறந்திடுமே
பாடல்கள் இனிதே பாடிடுமே
பாடும் ஒவ்வொரு பாட்டினிலும்
பற்பல பொருள்கள் இருந்திடுமே
பேடையைக் கொஞ்சிடப் பாடிடுமே
பிள்ளைகளுடனே பாடிடுமே
உரிமையைக் காக்கப் பாடிடுமே
உணவினைக் கண்டால் பாடிடுமே
ஆபத்து வந்தால் பறந்தோடித்
தப்பிச் சென்றிட ஒரு பாட்டு
உறவுகளோடு கூடிடவே
அதற்கென பாடும் தனிப்பாட்டு
குஞ்சுகளுக்கு இரையூட்டக்
குஷியாய்ப் பாடும் ஒரு பாட்டு
கோபம் தாபம் கொண்டாலோ
கொதித்து எழுமே ஒரு பாட்டு
பறவைகள் பாடும் பாட்டினிலே
அடடா! எத்தனை பொருள் இருக்கு
வெறும் குரல் எழுப்புது என்றிருந்தேன்
விஷயங்கள் எதனை மறைந்திருக்கு?