Thursday, June 28, 2018

இரண்டு கற்களின் கதை


கற்கள் இரண்டு மலையின் அடியில்
எடுப்பார் இன்றிக் கிடந்தது
சிற்பக் கலையில் கற்றுத் தேர்ந்த
சிற்பி கண்ணில் பட்டது

கற்கள் இவற்றில் கடவுள் சிலைகள்
தட்டித் தட்டிச் செய்யுவேன்.
மன்னரிடம் சென்று நானும்
பொன்னும் பொருளும் வெல்லுவேன்

என்று எண்ணம் கொண்டு சிற்பி
அந்த இரண்டு கற்களை
எடுத்துக் கொண்டு இருப்பிடத்தை
நோக்கிப் பயணம் வைத்தனன்

கையில் உளியும் சுத்தி  யலும்
எடுத்துக் கல்லில் வைத்தனன்
பையப் பையத் தட்டித் தட்டிக் 
கல்லின் திறத்தை உணர்ந்தனன்

உளியால் தட்ட ஓரடி ஒரு
கல்லின் மீது விழுந்ததும்
வலியால் துடித்த அந்தக் கல்லோ
வளைந்து கொடுக்க மறுத்தது

இன்னொரு கல் தட்டத் தட்ட
இசைந்து பணிந்து விட்டது
சிற்பி  யுடைய கற்ப னையும்                                 
சிறகை விரித்துப் பறந்தது

பட்ட அடிகள் தாங்கிய கல்
பரமன் சிலையாய் ஆனது
பாரின் வேந்தன் போற்றிப் புகழக்
கோவிலில்  குடி கொண்டது

தொட்ட உடனே வளைந்து கொடுக்க
மறுத்த கல்லோ மிதியடி
பட்ட கல்லாய் கோவிலின்
நுழைவாசல் படியாய்க் கிடந்தது

No comments:

Post a Comment